You are lookin' for..?

Monday, April 19, 2010

தமிழன் Vs சக தமிழன்.

முன்பு எழுதிய & Orkut குழுமத்திற்கு அனுப்பிய தேதியும் தந்து உள்ளேன்.

April 8, 2008 11:48 AM

எனது அபிமான நடிகர் திரு. ரகுவரன் அவர்கள் இழப்பு எதிர்பாரா ஒன்று. Style + திறமையான நடிப்பு என்றால் அது திரு. ரகுவரன் அவர்கள்தான்.

~ Hogenakkal குடிநீர் திட்டம் மீதான பிரச்னை: இங்கு எல்லோரும் ஒன்றுபட்டு போராடி வரும் வேளையில், சில பல அரசியல் காரணங்களால் போராட்டம் வேண்டாம் என திட்டம் ஒத்தி வைக்கப் படுகிறது, நமது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால். அப்படி என்றால், இதற்காக போராடிய மக்கள் முட்டாள்களா..? அல்லது தமிழ் உணர்வுடன் பேசி கன்னட மக்களை பகைத்து கொண்ட திரு. ரஜினி அவர்கள் இளிச்சவாயரா..? இப்படி ஏதோ ஓர்/சில/பல அரசியல் நாடகத்தினால்தான் காவேரி நதி பிரச்சினை இன்னும் நடந்து வருகிறது. அதே நாடகம் இந்த விசயத்திலும். இந்த உலக மக்களுக்கு ஓர் செய்தி: நீங்கள் தமிழனை தாக்க வேண்டாம். தமிழன், சக தமிழனால் அழிந்து போவான். மற்ற மக்கள் ஏன் தேவை இல்லாமல் தமிழனை தாக்கி கொண்டு..?

~ ~ Common-sense/கடமை..? இதில் எது high-priority உள்ளது..? It depends. நம் சக மனிதன் ஒருவர் தனது தந்தை இருதய வலியால் துடிக்க, தனது சொந்த Auto-வில் மருத்துவமனை நோக்கி - தாய் மற்றும் இருதய வலியால் துடிக்கும் தந்தையும் Auto-வில். ஓர் இடத்தில் Traffic-signal. பரபரப்பில் அவர் கடந்து செல்ல, அங்கு Duty பார்த்த Scotland-yard கடமை வீரர் (Police தான். வேற யாரு?)  அந்த மகனை சட்டம் என்ற பெயரில் கொடுமை படுத்த, இதனைப் பார்த்த தந்தை 'என்னால் எனது மகன் துன்பம் அனுபவிக்கிறாரே' என அந்த Auto-விலேயே தனது மனைவி மடியில் உயிர் நீத்தார். இந்த புல்லரிக்கும் கடமை தவறாத கர்மவீரர் காட்சி இங்கு நடந்தது. இந்த பழுத்த கழிசாடைகள் இருந்து என்ன பயன்..?

இந்த பகுதி மக்கள் அந்த Scotland-Yard (மூளை இல்லா Police)  வீரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியல் செய்தனர். அது எப்படி? சுதந்திர இந்தியாவில் ஒரு சாதாரண குடிமகன் நீதி கிடைக்க போராடி, அது வெற்றியும் பெற்று விட்டால், நீதி-தேவதை தனது இந்திய குடியுரிமையை தூக்கி எறிந்திவிடுவாள் அல்லவா.!?


~ ~ ~ சமீபத்தில் நடந்து முடிந்த கோவை CPI-M மாநாடு நிகழ்ச்சிகளை (சில நண்பர்களையும்) காண போயிருந்தேன். இந்த மாநாட்டில் சில அரிய புகைப்படங்கள் என் கண்ணில் பட்டது. அவைகளில் சில எனது ஆல்பத்தில் உள்ளது.

இந்த பொறுக்கி விடை பெறுகிறேன்.

* * * * *
March 24, 2008 4:24 AM

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: நடு நிலையுடன் வாசியுங்கள். நிறைய சொல்லி குறைவாக புரிந்து கொண்டால்..? குறைவாக சொல்லி தவறாக புரிந்து கொண்டால்..? ஆம், இதில் எதை சொல்வது அல்லது எதை விடுவது என்று புரியவில்லை.


ஒரு சின்ன தகவல்: நாம் எல்லோரும் 'வக்கிரம்' கலந்த எண்ணம் கொண்ட மனிதர்கள். நாம் அதனை காதல்/காமம் என்று முலாம் பூசி சொல்லலாம். இந்த 'வக்கிரம்' அளவு அதிகரிக்கும் போது/எப்பொழுதும் அதிக அளவு உள்ள, அவர்கள் வெறி கொண்ட மனிதர்களாக சமுதாயத்திற்கு ஒவ்வாத செய்யல் செய்கின்றனர். நாம் தேவையான அளவில் இந்த எண்ணம் உள்ளவர்கள் என்பதால் 'நல்லவர்கள்.' கொடுமைதான். வக்கிரம் அதிகமாக உள்ளவர்கள், சரி செய்யப்பட வேண்டியவர்கள்.

பெண்கள் செய்வது இல்லையா..? உண்டு. அவர்களால் ஆண்களை போல தாக்குதல் தொடுக்க முடியாது. ஆனாலும், ஆண்கள் மீதான அவர்களது 'பாலியல் வன்முறை' நடக்கிறது. மிக குறைவாக. இது மிக குறைவு என்பதால், வெளியே தெரிவது இல்லை. அவர்களது இன்னோர் வழி..? Mind Game. இதனால் வெளி உலகம் இதனை தெரியாத போல் இருந்து விடும். ஒரு சின்ன உதாரணம்: ஒரு ஆண் தன்னை ஒரு பெண் மோசம் செய்து விட்டதாக சொன்னால், சக ஆண்களே கிண்டல் செய்வார்கள். முதல் கேள்வி: நீயெல்லாம் ஒரு ஆம்பளையா..? ஒரு வேளை எதிர் காலத்தில் நடக்கலாம், இவ்வாறு: என்னை ஒரு பெண் மோசம் செய்து விட்டார் என்று காவல் துறையிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு. இந்த 'பரிணாம வளர்ச்சி' நடக்க எத்தனை 100/1000 கோடி வருடங்கள் ஆகும் என்று கூற முடியாது.


ஒரு விசயம் மறுக்க முடியாது: இந்த லோகத்தில் 'ஆணின் உலகம் பெண்ணை சார்ந்தது- 'பெண்ணின் உலகம் ஆண் சார்ந்தது- விதிவிலக்கு இருக்கலாம். பிறகு ஏன் இந்த 'வன்முறை'? இந்த தப்பு எப்பொழுது சரி செய்யப்படும்..? ஆகாது. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சம்பவமாவது நடக்கும்.

ஒரு இயற்கை/அறிவியல் சார்ந்த உண்மை: அது எப்படி ஆண் ஒரு பெண்ணை பார்த்த உடன் 'ஏதேதோ' எண்ணம் கொள்கிறான்.!? இது எப்பொழுதும் அல்ல. சில நேரங்களில். காரணங்கள்: ஒரு பெண்ணின் உடல் & மனது இயங்கும் பாணி, காதல்/காமம் போன்ற விசயங்களுக்கு Respond செய்யும் விதம், இவைகளுக்கு மூளை இயங்கும் விதம் எல்லாம் ஒரு ஆண் விசயத்தில் நடப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இன்னொரு விசயமும் உள்ளது. இதனை நான் கூற விரும்பவில்லை. காரணம் - புரிந்து கொள்ள எல்லோரும் தயார் என்று எனக்கு தோன்றவில்லை. இது ரொம்ப Sensitive.

இதன் இரண்டாம் பாகத்தில் உங்களை சந்திக்கிறேன்.

குறிப்பு: இதனை March 24, 2008 அன்று எழுதியுள்ளேன். இன்று வரை அதான் இரண்டாம் பாகம் எழுதவில்லை. காரணம் - நம் மக்களின் Hypocrisy.

* * * * *
September 1, 2008 2:46 PM

An Infant, just a day old, struggles to open his eyes. Flies n Ants were all over his body when they found him under a tree. Ms Mala, mother of two, took the baby to the University Health Centre. Afterwards, Police took the baby to Panacea Hospital. When the baby was brought to the hospital, he came with insect bites on his face. His sugar was low. Authorities suspected a damage in his Cornea.

Do you friends understand what happened to the baby..? The baby was abandoned by his parents n placed under a tree at BU's campus.


If they (parents) had an intention to abandon their baby, they should have given the baby to any one of the charity organisations which controlled by Govt. (I may be sounded goose. If you decided to abandon, there is no point to look after the baby anymore). Therefore, they (his parents) did a fantastic job. If they did it intentionally, as sayin' goes, I wanna call them 'Fu***n' Machines.' (Sorry for my F).

Ms Mala has been lookin' after the baby since Friday. Hats off to Ms Mala. Bravo..!

No comments:

Post a Comment