You are lookin' for..?

Tuesday, August 17, 2010

எங்களை பைத்தியம் என்பார்கள்

'Inception படம் பாக்க போயிருந்தேன். படம் புரியாமல் எல்லோரும் போய் விட்டார்கள்.' வேற யாரு, நம்ம தமிழ் சினிமா 'கதா நாயகன்' சிம்பு சொன்னது. நண்பர்கள் நாங்கள் சென்ற வாரம் ஞாயிறு இதே Inception படத்திற்கு Ticket கிடைக்காமல் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும். இவர் 'இவரை' போலவே உள்ள மக்களுடன் படம் பார்த்திருப்பார் போலிருக்கு.




/* Inception படத்தின் தெளிவான விமர்சனம் படிக்க, இந்த உரலியை சொடுக்கவும் (என்ன தமிழ் விளையாட்டு..!) -
http://worldmoviesintamil.blogspot.com/2010/07/inception-2010.html
இந்த Blog எழுதும் நபர் எனக்கு அறிமுகமும் இல்லை. நண்பரும் இல்லை. அந்த முகம் அறியா தோழருக்கு எனது நன்றிகள். விமர்சனம் நன்றாக இருப்பதால் எடுத்து கையாண்டுள்ளேன். அந்த தோழர் மன்னிப்பாராக. */

மொக்கை - 'சினிமாவில் Sex இருந்தால் என்ன தப்பு?' என சிம்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள். அதுல எந்த தப்பும் இல்லைங்க. ஆனால், Censor Board-ல Certificate வாங்கும் போது நேர்மையா 'A'-னு வாங்க 'உங்களை போல' உள்ள Semi-Creators!?! தயாரா? அது என்னங்க (என் மரமண்டைக்கு புரியாத விஷயம்) U/A-னு  ஒரு பித்தலாட்டம்?

இன்னொரு மொக்கை - 'பேருக்கு முன்னால அடை மொழி இருந்தா என்ன தப்பு? நண்பர்கள் ஆசையா உங்களை செல்ல பேர் சொல்லி அழைப்பது போலதான் இதுவும்.' இதுவும் சிம்பு அவர்கள்தான். உங்களை போல ஒரு நடிகர், ஆனால் அவர் ஒரு சகாப்தம் - அவர் 'கவுண்டமணி' - சொன்னது 'உலக நடிகன் Marlon Brando-வுக்கே அடை மொழி கிடையாது. நாம என்ன அந்த அளவுக்கா நடிச்சி கிழிசிபுட்டோம் அடை மொழி போடுறதுக்கு?' என சொன்னதாக நான் கேள்விப்பட்டதுண்டு. நீங்கள் கேள்விபட்டதில்லையா, சிம்பு?


in Streetcar named Desire

* * * * *

கருணாநிதி அவர்களது சமீபத்திய (சுமாராக கடந்த ஐந்து வருடங்களாக) எழுதும் மற்றும் பேசும் வசனங்கள் பற்றி என்ன என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கின்றன. இவர் எப்பொழுதும் இப்படிதானா, நாங்கள்தான் பள்ளி பருவத்தில் தவறாக இவரை கொண்டாடிவிட்டோமோ என்று நண்பர்கள் வருந்தினோம்.




கோவை செம்மொழி மாநாட்டில் ஒரு 'சமைஞ்சது எப்படி' கவி எழுதிய மடக்கு வரி கதை இதோ, உங்களுக்காக - - -

உலகிற்கு ஒரு ஐ.நா
உலக தமிழ் மக்களுக்கு நீ ஒரு நைனா

இந்த கவி போற்றிய 'பாட்டு தலைவன்' யார் என்று உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும்.

* * * * *




சென்ற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் புதிதாக படிக்க புத்தகம் இல்லாமல் மந்த நிலையிலேயே இருந்தேன். சாரு, சுஜாதா, கி.ரா அவர்களின் நூல்களிற்கும், மற்றும் எழில் வரதனின் சிறு கதைகள்,  பாமரனின் சமீபத்திய கட்டுரைகளும், ஞாநி அவர்களது புதிய கட்டுரைகளும் கிடைக்காதா என சுற்றி சுற்றி வந்தேன். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதனால் தலைவலியும் வந்துவிட்டது. ஞாயிறு அன்று என் தம்பி என்னிடம் 'எப்படியாவது இன்று Inception படம் பார்க்கிறோம்' என எனது மந்த நிலையை ஓரளவு சரி செய்தார்.


Click on this to get to know 'bout Dr A P J Abdul Kalam and Mr Sujatha


* * * * *

Common Wealth Games-க்கு நமது இந்திய அரசு செலவு செய்த தொகை 70,000 கோடி ரூபாய். இந்த அளவு செலவு செய்ததற்கு நமது நாட்டிற்கு உலக அளவில் பெரிய மரியாதையும், விளையாட்டு துறையில் ஒரு மிக பெரிய கௌரவமும் உலக அளவில் கிடைத்திருக்க வேண்டும். என்ன சொல்ல, ஊழல் நரிகள் உள்ள கூடாரத்தில் நல்லது நடக்குமா.? உலக அளவில் 'ஊழல் நாடு' என்ற 'புகழ்' கிடைத்த நிம்மதி நமக்கு. எனக்கு தெரிந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக, 'மைதானங்கள் தயாராகவில்லை, குறித்த நேரத்தில் பணிகள் முடியாது, சில உலக புகழ் வீரர்கள் பங்குகொள்ள மாட்டார்கள், நிறைய ஊழல் நடக்கிறது' என சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. இப்பொழுது எல்லாம் உண்மையாகி விட்டது.


Pollution and Corruption in CWG 2010, Delhi

Sonia Gandhi உண்மை பேசமாட்டார். Manmohan Singh உண்மையும் பேசமாட்டார், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கமாட்டார். Suresh Kalmadi ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்கு ஒரு லட்சம் தந்ததாக கணக்கு காட்டுவார், அதனை Sonia Gandhi மற்றும் Manmohan Singh இருவரும் ரசிப்பார்கள். நம் நாட்டு மக்களும் 'நம்புவார்கள். அமைதியாய் இருப்பார்கள்.' என்ன நாடு இது, என்ன மாதிரியான அரசியல்வாதிகள் இவர்கள்.

* * * * *

நகைசுவை துணுக்கு - - -
'Warren Anderson, Chairman of Union Carbide, தப்பித்தது எப்படி என்றும், தப்பிக்க வைத்தது யார் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.'




சொன்னவர் ப.சிதம்பரம் அவர்கள். சபாஷ் ப.சி. அவர்களே. உங்களிடம் இந்த தேசத்தின் பாதுகாப்பை தந்துள்ளான் இந்த இளித்தவாய் இந்தியன். நேர கொடுமை, நீங்கள்தான் தீவிரவாதிகளிடம் இருந்து எங்களையும், எங்கள் நாட்டையும் அரண் செய்வீர்களாம்... எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் இது..! பழங்குடி மக்களை கொல்வதும், அவர்களை நிர்கதியாய் அலையவிடுவதும், அவர்களது கிராமத்தை தீயில் கருக வைப்பதும், அவர்களை முள் வேலிக்குள் 'அடக்கி-அடைத்து' வைக்கவும் தெரிந்த உமக்கு சில 'உண்மைகள்' தெரிய வாய்ப்பில்லைதான். என்ன கண்றாவியோ..!

* * * * *

ஒரு அப்பட்டமான உண்மை - - -
'Boys படத்தில் நடித்த பிறகு நடிப்பதை நிறுத்தி விடலாம் என நினைத்தேன். இந்த படத்தில் நடித்ததிற்கு வருந்தினேன்; வருந்துகிறேன். Telugu மொழியில் நடித்த (தமிழில் வந்த ச.) படம் என் சினிமா வாழ்வில் நடந்த ஒரு நல்ல விஷயம். இதுவே என் முதல் படம் என கூறுகிறேன்.'




சொன்னவர் நடிகர் 'சித்தார்த்.' இந்த மக்களுக்கு Boys படத்தின் இயக்குனர் (ஷங்கர்) பற்றி சொல்ல உங்களை போன்ற 'அறிவுள்ள' ஒரு ஆள் போதாது. சொன்னால், நம்மளை பைத்தியம் என்பார்கள். தமிழன் குப்பை திரைப்படங்களையே பார்த்து அழியட்டும். தமிழனுக்கு யாராவது எடுத்து சொன்னாலும் புரியாது.

No comments:

Post a Comment