You are lookin' for..?

Monday, April 19, 2010

உணர்வு, மூளை & மனசாட்சி இல்லா பதர்கள்.

April 8, 2008 11:48 AM    - இந்த தேதியில் எழுதிய கட்டுரையில் ஒரு Scotland-Yard கதை சொல்லி இருந்தேன். அதை மிஞ்சும் இன்னொரு கதை இதோ - - -

நமது 'நீதி'மன்றத்தில் நீதிபதி அவர்கள், குற்றவாளி கூண்டில் உள்ளவரிடம் 'உங்கள் மீது குற்றம் சாட்டபட்டுள்ளதற்க்கு உங்கள் வாதம் என்ன?' என்று கேட்கிறார். அவர் கேட்ட பதில் 'பசியால் வாடுகிறேன். சாப்பிட எதாவது கொடுங்களேன்' என. என்னடா குரல்தான் வருகிறது, ஆளை காணோமே என்று நீதிபதி தேடுகிறார் - ஒரு ஆறு வயது பொடிசு குற்றவாளி கூண்டில் நிற்கிறது. அந்த பொடிசு உண்மையாகவே வாடி போய் நிற்கிறது. நீதிபதி அந்த குட்டிக்கு உணவு வாங்கி வர சொல்லி, அந்த பிஞ்சுவின் பசியை போக்குகிறார்.


நடந்தது என்ன என்று உங்களுக்கு சொல்லுகிறேன்: இந்த பொடிசுவின் தந்தைக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கும் தகராறு. இது Police Case-ஆகி Court வரை வந்துடுச்சி. இந்த 'உலக அரசியல் தலைவர் படுகொலை' சதியில் அந்த பிஞ்சுக்கும் தொடர்பு உண்டு என குற்றவாளியாக்கப்பட்டு 3K.M. நடத்தி (அல்லது இழுத்து) அழைத்து வந்துள்ளனர் 'நீதி'மன்றம் வரை.

இந்த பொடிசு இதன் சத்துக்கு என்ன செய்து இருக்கும் இந்த Case-ல் குற்றவாளி என்று சேர்க்கும் அளவிற்கு? ஒரு குட்டி உருவத்தை & பிஞ்சு மனசை எப்படி 3K.M. நடத்தியே அழைத்து வந்தனர்? இந்த 'வெங்காயங்கள்' எல்லாம் எப்படி வேலைக்கு வராங்க? உண்மையில் 'பழுத்த கழிசாடைகள்.'

நீதிபதி சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? 'இந்த பொடிசு சம்பந்தப்பட்ட Case எவ்ளோ பெரியதாக இருந்தாலும் அதனை Dismiss செய்கிறேன்' என்பது அவரது தீர்ப்பு. Bravo, நீதிபதி அவர்களே. இது நடந்தது நமது இந்தியா என்று சொல்ல வேண்டியது இல்லை. மாநிலம் - உத்திரப்பிரதேசம்.

* * * * *

எம் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் இந்தியாவிற்குள் நுழைய 'அனுமதி மறுக்கப்பட்டவர்களில்' ஒருவர் என அவரை Airport-லேயே திருப்பி அனுப்பிவிட்டனர் Malaysia-விற்கு.

திருமதி. பார்வதி வேலுப்பிள்ளை அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது, இந்தியா வருவதற்கு. இது நடந்தது காலையில். அதே இரவு அந்த Visa-வுடன்  இந்தியா வர, தவறுதலாக Visa வழங்கிவிட்டோம் என்று அவரை திருப்பிய அனுப்பிவிட்டனர், அவர் வந்த விமானத்திலேயே. அவர் சிகிச்சைக்காக தமிழகம் வந்ததாக கூறப்படுகிறது. 12 மணி நேரத்தில் அரசியல் விளையாடிவிட்டது..!

In this file photo, Mr and Mrs Velupillai are seen with Mr and Mrs Prabhakaran and Mr Charles Antony.


இந்த விளையாட்டில் சம்பந்தபட்டவர்களுக்கு - காலமும், எம் மக்களும் மன்னிக்க மாட்டார்கள் உங்களை. நீங்கள் மனம் திருந்தி, மனசாட்சி உறுத்தலால் உழலும் போது உங்களை மன்னிக்க எம் மக்களும், காலமும் இல்லாமல் போயிருக்கும். அப்போது தெரியும் ஒரு இனம் பட்ட வேதனைகளும், வலிகளும்.

* * * * *

பழங்குடி மக்களுக்கு ஆசை, பேராசை என்றால் என்னவென்றே தெரியாது. காடும் காடு சார்ந்த இடமும் (வளமும்), மலையும் மலை சார்ந்த இடமும் (வளமும்) என அமைதியாக (நாம் அறியாத ஒண்று)வாழ்ந்தவர்களை Corporate காரர்களிடம் விற்றதால் வந்தது பிரச்னை. ஒரு நாள் அவர்களிடம் 'வாழ்வியல் ஆதாரங்கள்' எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடுங்கள் என்றால் எங்கு போவார்கள்? சில லட்சம் மக்கள் முள் வேலிக்குள், புரட்சி செய்ய கூடாது என்பதற்காக.

இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் இல்லை. தனது மண்ணின் சொந்த மக்களை வேறு எந்த நாடும் இந்த அளவிற்கு கொடுமை செய்து இருக்காது. Maiost-கள் போராடி வருகிறார்கள் இந்த அரசுக்கு எதிராக. Maiost-கள் இல்லை என்றால் பாதி இந்தியா விலை போயிருக்கும் எப்பொழுதோ. முழு இந்தியாவும் வெகு விரைவில்.

அரசுவின் படை வீரர்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல், போதிய அளவு உன்ன உணவு இல்லாமல், தங்க ஆரோக்கியமான Camp இல்லாமல், இல்லாமல் - இல்லாமல் - இல்லாமல், இறுதியில் Maiost-களுக்கு எதிரான போரில் ஆளே இல்லாமல் போகிறார்கள். Dantewada Attack-ன் போது அரசு படை வீரர்களின் Camp-ன் நிலை இதோ - படுப்பதற்கு, சமைப்பதற்கு, ஓய்வு எடுப்பதற்கு, தங்கள் அனைத்து உடமைகளையும் வைப்பதற்கு, -ற்கு -ற்கு - ற்கு என ஒரே Camp-ஐ  உபயோகப்படுத்தி உள்ளனர். இவர்கள் உயிர் போனாலும் சொற்பமான ஓய்வுதியம். இந்த அரசு என்று இல்லை, எந்த அரசும் ஏன் இந்த அப்பாவி & நெஞ்சுரம் மிகுந்த வீரர்களின் நலனில் அக்கறை எடுத்து கொள்வதில்லை???

'ஐயா, எங்கள் நாட்டின் அரசு வீரர்களே. நீங்கள்தான் வாழும் தெய்வங்கள். உங்கள் உயிரை தந்து எங்களை காப்பதால். நீங்கள் இந்த நாட்டில் எந்தெந்த இடங்களில் எல்லாம் உங்கள் உயிர் தந்து எங்களை காக்க நிற்கிறீர்களோ, அந்த திசை எல்லாம் நோக்கி உங்களை நான்/நாங்கள் வணங்குகிறேன்/றோம்.'

Maiost-களுடன் அரசும் & அதிகாரிகளும் Negotiate செய்யவேண்டிய நேரம் இது. உயிர் Maiost-கள் பக்கம் போனாலும், அரசு தரப்பில் போனாலும் எங்கோ ஒரு மூலையில் அவரை நம்பி இருக்கும் பல உயிர்கள் மீளாத்துயரில் வாடுகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம். இது செய்த தப்புகளை திருத்திக்கொள்ளும் நேரம். வாய்ப்பை தவற விட வேண்டாம்.

This file picture shows you the Naxal or Maoist Corridor. This picture was illustrated in 2007. Today, the corridor is much bigger than you think.

2 comments:

  1. நல்ல விசயங்கள்... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ Madurai Saravanan: It's my duty, Thozha. I owe you a million thanks. Take care. Enzoy.

    + With u, For u, Always :) -

    ReplyDelete