You are lookin' for..?

Friday, April 30, 2010

100ml கூட இல்லை. Scene போடுறானே. இவனை??

வெங்கட்டும் நானும் ஒரு இடத்தில் இருந்தால் எங்களை சுற்றியுள்ள ஒருவரையாவது 'இந்த ரெண்டு பேரையும் கொலை பண்ணா நல்லது'னு நினைக்கிற மாதிரி எதையாவது பண்ணுவோம். இந்த கதை எங்கள் கல்லூரி நாட்களில் நடந்தது.

நான் மது அருந்த ஆரம்பித்த நாள் 14 February, 2004. (ரொம்ப நல்ல நாள் என்று நினைக்கிறேன்). எனக்கு சில விதிமுறை உள்ளது. அவைகள் - அருந்தினால் Beer அல்லது Tequila (உச்சரிப்பு - Teˈkila). முதலில் உள்ளதை ஒண்ணுக்கு (Full Beer) மேல இந்த உடம்பு தாங்காது. இரண்டாவதாக உள்ளதை 90ml-க்கு மேல இந்த உடம்பு ஏத்துக்காது. ஒருமுறை அருந்தினால் மறுமுறை அருந்த குறைந்தது 3 மாதம் எடுத்துக்கொள்வேன். ரொம்ப நேரம் அருந்துவேன் இந்த குறைவான அளவுகளை. Beer என்றால் Foster, Heineken, Budweiser மற்றும் நம்ம Kingfisher Strong. வேற Brand எந்த காரணம் கொண்டும் தொடுவதுயில்லை. B'lore-ல் இந்த நாலு Brand-ல் எதாவது ஒண்று. வேறு எங்கு போனாலும் Kingfisher-ஐ தொட மாட்டேன். காரணம், நன்றாக இருக்காது. இந்த விதிமுறைகள் எந்த நிலையிலும் மீறுதல் இல்லை.

Temple of Delicious - a beautiful rack for Tequila.


நான் காலையிலேயே Beer வாங்க போனால் என்னோடு தங்கியிருக்கும் நண்பர்கள் காண்டு ஆயிடுவாங்க. ஒரு Beer வாங்கிட்டு வந்து, ரெண்டு மடக்கு உள்ள தள்ளிட்டு துணி துவைப்பேன். மீண்டும் ஒரு ரெண்டு மடக்கு தள்ளிட்டு ஒரு படம் பார்ப்பேன். அப்புறம் ஒரு ரெண்டு மடக்க போட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்குவேன். இப்படி காலை 11 மணிலேருந்து இரவு 7 மணிவரைக்கும் ஆட்டம் போடுவேன். என் நண்பர்கள் விதம் விதமா திட்டுவார்கள் 'ஒரு Beer-க்கு இவன் போடுற Scene இருக்கே, உலக கொடுமைடா சாமி' என்கிற வகையில். இந்த 'உலக விருது வாங்கிய மது அருந்தும் பழக்கத்தை' நிறுத்தி இரண்டு வருடம் ஆகிவிட்டது.



எங்களோட Atrocity-க்கு வருவோம். வெங்கட், பொன்ராஜ், முரளி, பார்த்திபன், முபாரக் & நானும் சேர்ந்து கோயம்புத்தூர் மாநகரத்தில் செய்தது. இரவு 7 மணிக்கு மேல் மது அருந்தலாம் என முடிவு செய்கிறோம். முபாரக்கும் நானும் மது கடையை நோக்கி. போகிற வழியில் முபாரக் ஒரு பெண்ணை பார்த்துவிடுகிறார். இருவரும் Signal பரிமாற்றம். அவருடன் வரும் எனக்கு இது எதுவும் தெரியாது. அந்த அளவுக்கு கூமுட்டை நான். மது கடைக்குதான் போறோம்னு நானும் நம்பி அவருடன். திடீரென்று ஒரு கண்காட்சி வளாகத்தில் நுழைகிறார். நான் 'என்ன முபாரக் இங்க வந்துட்டீங்க' என்றதற்கு, 'ஒரு பெண்ணை பார்த்தேன். அவர் இதுக்குள்ள வந்தார். நானும்' என்று பதில் தந்தார். ஒரு அரை மணிநேரம் வீணானது.

ஒலம்பஸ் Area-வில் பத்து கடைகள் ஏறி, இறங்கினோம் எனது மற்ற மூன்று Brand-ல் ஒண்ணாவது வாங்க. இல்லை. எங்கும். வேறு வழி இல்லாமல் 'சிங்கங்களின் Zingaro', Black Knight, Golconda மற்றும் Kalyani என கலந்துகட்டி வாங்கிகொண்டு நாங்கள் தங்கியிருந்த  வீடு வந்தோம். ரவுண்டு கட்டி உட்கார்ந்து ஆரம்பித்தோம். வாங்கியதில் இதுதான் உனக்கு சேரும் என்று ஒன்றை கையில் தந்தனர். ஆரம்பிக்கவே இல்லே, அதுக்குள்ள 'மொத்த' Side-Dish-ல பாதிய முடிச்சேன். 'இந்த பாவத்துக்கு இவனை இன்னிக்கி காவு கொடுக்க வேண்டியதுதான்' என்ற கொலை வெறியுடன் நண்பர்கள் கச்சேரிய ஆரம்பித்தனர்.

100ml முடிக்கவில்லை நான். அதுக்குள்ள தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. 'இதுக்குதான் மாற்றான் தோட்டத்து மல்லி வேண்டாம்னு நான் சொல்வது' என நிறுத்திவிட்டேன். பயங்கர காட்டம். அன்று இரவு 10 மணி K.P.N. பேருந்தில் தஞ்சாவூர் செல்வதற்கு வெங்கட்டும் நானும் Ticket வாங்கி இருந்தோம். காந்திபுரம் Office தான் Boardin' Point. காரைக்கால் வரை செல்லும் பேருந்து இது, கும்பகோணம் வழியாக. எனவே நான் உடை மாற்ற போனேன். நண்பர்கள் கச்சேரி ஆர்வத்தில். Pant மாட்ட முடியல. உடல் ஆட ஆரம்பித்துவிட்டது. ஆக, நான் Wall-ஐ பிடித்து கொண்டு Pant மாட்ட முயற்சி. இதை எதிரி-நண்பர்கள் பார்த்துவிட்டனர். பொன்ராஜ் 'எங்களை கேவலப்படுத்தாதடா. செவுத்த புடிச்சி இப்ப எதுக்கு நீ தள்ளிகிட்டு இருக்க. அந்த அளவுக்கா அடிச்ச, டோமரு' என திட்டியபடி எனக்கு உடை அணிவித்தான்.



ஒரு வழியா பேருந்துல ரெண்டு பேரும் ஏறிட்டோம். எங்களை Bike-ல் காந்திபுரம் கூட்டிவந்தது பொன்ராஜ் & முரளி. K.P.N. Office-ல, அங்கு மற்ற பேருந்துகளுக்கு Wait செய்தவர்கள் எல்லாம் 'யார் இந்த ரெண்டு அராத்துகள்' என்ற தொனியில் பார்த்தனர். எங்கள் பேருந்தின் உள்ளே நாங்கள் போகும்போது 'அப்படி ஒரு நிசப்தம்.' காரணங்கள் - எங்கள் உருவம், எங்கள் மது வாசனை, எனது 'ஆடும்' நிலை, நாங்கள் பேசிய 'ங்கொயால ஆங்கிலம்.' பேருந்து எடுக்கும் நேரத்தில் ஒருவனை காணவில்லை என்று பேருந்து காத்தியிருந்தது. அந்த ஒருவன் நானேதான். Beer வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. 100-99 அவசர அழைப்பு. நான் அடிச்ச Beer அளவை வெளிய சொன்னா கேவலம்.!! Main Driver & அவரது Assistant இருவரையும் Friend புடிச்சிகிட்டோம்.

காந்திபுரம் வந்ததிலேருந்து இருவரும் ஆங்கிலம். பேருந்துனில் நாங்க ரெண்டு பேர் மட்டுமே 'கஷ் புஷ்'னு அரட்டை. மெதுவாதான் பேசினோம். மற்றவர்கள் பேசாததால் எங்கள் முன், பின் இருந்தவர்களுக்கு நாங்கள் Nuisance. எங்கள் இரு இருக்கைகளின் நடுவே ஒரு புதிய தலை முளைத்தது பின்னாலிருந்து. ரொம்ப பாவமான குரலில் 'நீங்க ரெண்டு பேரும் எங்க போறீங்க'னு கேட்க, 'நாங்கள் தஞ்சாவூர் போகிறோம்'னு சொல்ல, அதற்கு அவர் 'அப்ப அதுவரைக்கும் இப்படிதானா.?! விதி வலியது' என்று சொல்ல, மப்பிலும் சிரித்து விட்டோம். இதைவிட பெரிய கொடுமை 20 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்தை நிறுத்த சொல்லி இருவரும் 100-99 அவசர அழைப்பு.

இந்த Incident-ஐ வெங்கட்டும் நானும் தினம் பேசி சிரிப்பது வழக்கம். எங்கள் அரட்டையை அன்று பொறுத்துக்கொண்ட முன், பின் இருக்கை பொறுமையாளர்களுக்கும், எங்கள் அவசர அழைப்பு நிறுத்தங்களை பொறுத்துக்கொண்ட சக பயணிகளுக்கும், எங்களை நல்லபடியாக கவனித்துக்கொண்ட - சொன்னதெல்லாம் செய்த அந்த இரு ஓட்டுனர் தகப்பன்சாமிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment