You are lookin' for..?

Showing posts with label Exploitation. Show all posts
Showing posts with label Exploitation. Show all posts

Tuesday, August 17, 2010

எங்களை பைத்தியம் என்பார்கள்

'Inception படம் பாக்க போயிருந்தேன். படம் புரியாமல் எல்லோரும் போய் விட்டார்கள்.' வேற யாரு, நம்ம தமிழ் சினிமா 'கதா நாயகன்' சிம்பு சொன்னது. நண்பர்கள் நாங்கள் சென்ற வாரம் ஞாயிறு இதே Inception படத்திற்கு Ticket கிடைக்காமல் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும். இவர் 'இவரை' போலவே உள்ள மக்களுடன் படம் பார்த்திருப்பார் போலிருக்கு.




/* Inception படத்தின் தெளிவான விமர்சனம் படிக்க, இந்த உரலியை சொடுக்கவும் (என்ன தமிழ் விளையாட்டு..!) -
http://worldmoviesintamil.blogspot.com/2010/07/inception-2010.html
இந்த Blog எழுதும் நபர் எனக்கு அறிமுகமும் இல்லை. நண்பரும் இல்லை. அந்த முகம் அறியா தோழருக்கு எனது நன்றிகள். விமர்சனம் நன்றாக இருப்பதால் எடுத்து கையாண்டுள்ளேன். அந்த தோழர் மன்னிப்பாராக. */

மொக்கை - 'சினிமாவில் Sex இருந்தால் என்ன தப்பு?' என சிம்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள். அதுல எந்த தப்பும் இல்லைங்க. ஆனால், Censor Board-ல Certificate வாங்கும் போது நேர்மையா 'A'-னு வாங்க 'உங்களை போல' உள்ள Semi-Creators!?! தயாரா? அது என்னங்க (என் மரமண்டைக்கு புரியாத விஷயம்) U/A-னு  ஒரு பித்தலாட்டம்?

இன்னொரு மொக்கை - 'பேருக்கு முன்னால அடை மொழி இருந்தா என்ன தப்பு? நண்பர்கள் ஆசையா உங்களை செல்ல பேர் சொல்லி அழைப்பது போலதான் இதுவும்.' இதுவும் சிம்பு அவர்கள்தான். உங்களை போல ஒரு நடிகர், ஆனால் அவர் ஒரு சகாப்தம் - அவர் 'கவுண்டமணி' - சொன்னது 'உலக நடிகன் Marlon Brando-வுக்கே அடை மொழி கிடையாது. நாம என்ன அந்த அளவுக்கா நடிச்சி கிழிசிபுட்டோம் அடை மொழி போடுறதுக்கு?' என சொன்னதாக நான் கேள்விப்பட்டதுண்டு. நீங்கள் கேள்விபட்டதில்லையா, சிம்பு?


in Streetcar named Desire

* * * * *

கருணாநிதி அவர்களது சமீபத்திய (சுமாராக கடந்த ஐந்து வருடங்களாக) எழுதும் மற்றும் பேசும் வசனங்கள் பற்றி என்ன என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கின்றன. இவர் எப்பொழுதும் இப்படிதானா, நாங்கள்தான் பள்ளி பருவத்தில் தவறாக இவரை கொண்டாடிவிட்டோமோ என்று நண்பர்கள் வருந்தினோம்.




கோவை செம்மொழி மாநாட்டில் ஒரு 'சமைஞ்சது எப்படி' கவி எழுதிய மடக்கு வரி கதை இதோ, உங்களுக்காக - - -

உலகிற்கு ஒரு ஐ.நா
உலக தமிழ் மக்களுக்கு நீ ஒரு நைனா

இந்த கவி போற்றிய 'பாட்டு தலைவன்' யார் என்று உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும்.

* * * * *




சென்ற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் புதிதாக படிக்க புத்தகம் இல்லாமல் மந்த நிலையிலேயே இருந்தேன். சாரு, சுஜாதா, கி.ரா அவர்களின் நூல்களிற்கும், மற்றும் எழில் வரதனின் சிறு கதைகள்,  பாமரனின் சமீபத்திய கட்டுரைகளும், ஞாநி அவர்களது புதிய கட்டுரைகளும் கிடைக்காதா என சுற்றி சுற்றி வந்தேன். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதனால் தலைவலியும் வந்துவிட்டது. ஞாயிறு அன்று என் தம்பி என்னிடம் 'எப்படியாவது இன்று Inception படம் பார்க்கிறோம்' என எனது மந்த நிலையை ஓரளவு சரி செய்தார்.


Click on this to get to know 'bout Dr A P J Abdul Kalam and Mr Sujatha


* * * * *

Common Wealth Games-க்கு நமது இந்திய அரசு செலவு செய்த தொகை 70,000 கோடி ரூபாய். இந்த அளவு செலவு செய்ததற்கு நமது நாட்டிற்கு உலக அளவில் பெரிய மரியாதையும், விளையாட்டு துறையில் ஒரு மிக பெரிய கௌரவமும் உலக அளவில் கிடைத்திருக்க வேண்டும். என்ன சொல்ல, ஊழல் நரிகள் உள்ள கூடாரத்தில் நல்லது நடக்குமா.? உலக அளவில் 'ஊழல் நாடு' என்ற 'புகழ்' கிடைத்த நிம்மதி நமக்கு. எனக்கு தெரிந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக, 'மைதானங்கள் தயாராகவில்லை, குறித்த நேரத்தில் பணிகள் முடியாது, சில உலக புகழ் வீரர்கள் பங்குகொள்ள மாட்டார்கள், நிறைய ஊழல் நடக்கிறது' என சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. இப்பொழுது எல்லாம் உண்மையாகி விட்டது.


Pollution and Corruption in CWG 2010, Delhi

Sonia Gandhi உண்மை பேசமாட்டார். Manmohan Singh உண்மையும் பேசமாட்டார், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கமாட்டார். Suresh Kalmadi ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்கு ஒரு லட்சம் தந்ததாக கணக்கு காட்டுவார், அதனை Sonia Gandhi மற்றும் Manmohan Singh இருவரும் ரசிப்பார்கள். நம் நாட்டு மக்களும் 'நம்புவார்கள். அமைதியாய் இருப்பார்கள்.' என்ன நாடு இது, என்ன மாதிரியான அரசியல்வாதிகள் இவர்கள்.

* * * * *

நகைசுவை துணுக்கு - - -
'Warren Anderson, Chairman of Union Carbide, தப்பித்தது எப்படி என்றும், தப்பிக்க வைத்தது யார் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.'




சொன்னவர் ப.சிதம்பரம் அவர்கள். சபாஷ் ப.சி. அவர்களே. உங்களிடம் இந்த தேசத்தின் பாதுகாப்பை தந்துள்ளான் இந்த இளித்தவாய் இந்தியன். நேர கொடுமை, நீங்கள்தான் தீவிரவாதிகளிடம் இருந்து எங்களையும், எங்கள் நாட்டையும் அரண் செய்வீர்களாம்... எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் இது..! பழங்குடி மக்களை கொல்வதும், அவர்களை நிர்கதியாய் அலையவிடுவதும், அவர்களது கிராமத்தை தீயில் கருக வைப்பதும், அவர்களை முள் வேலிக்குள் 'அடக்கி-அடைத்து' வைக்கவும் தெரிந்த உமக்கு சில 'உண்மைகள்' தெரிய வாய்ப்பில்லைதான். என்ன கண்றாவியோ..!

* * * * *

ஒரு அப்பட்டமான உண்மை - - -
'Boys படத்தில் நடித்த பிறகு நடிப்பதை நிறுத்தி விடலாம் என நினைத்தேன். இந்த படத்தில் நடித்ததிற்கு வருந்தினேன்; வருந்துகிறேன். Telugu மொழியில் நடித்த (தமிழில் வந்த ச.) படம் என் சினிமா வாழ்வில் நடந்த ஒரு நல்ல விஷயம். இதுவே என் முதல் படம் என கூறுகிறேன்.'




சொன்னவர் நடிகர் 'சித்தார்த்.' இந்த மக்களுக்கு Boys படத்தின் இயக்குனர் (ஷங்கர்) பற்றி சொல்ல உங்களை போன்ற 'அறிவுள்ள' ஒரு ஆள் போதாது. சொன்னால், நம்மளை பைத்தியம் என்பார்கள். தமிழன் குப்பை திரைப்படங்களையே பார்த்து அழியட்டும். தமிழனுக்கு யாராவது எடுத்து சொன்னாலும் புரியாது.

Saturday, June 12, 2010

Bhopal - Hiroshima of Chemical Industry

சென்ற ஞாயிறு (6 June 2010௦) அன்று Vijay தொலைக்காட்சியில் 'நீயா? நானா?' நிகழ்ச்சி பார்த்தேன். கல்வி மீதான நமது பார்வைகளும், கருத்துகளும், வாதங்களும் மற்றும் அதான் மீதான அன்பும் பற்றி அறிய எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஒரு நல்ல இதயம் பேசிய வார்த்தைகள் எனது இரண்டு நாள் தூக்கத்தை எடுத்து சென்றது. எவ்வளவு புள்ளி விவரங்கள்; எவ்வளவு உண்மையான வார்த்தைகள்; எவ்வளவு நேசிப்பு கல்வி மீது; ஐயா, எனக்கு உங்கள் பெயர் தெரியாது. உங்கள் பாதம் தொடுகிறேன். கல்வி மீதான உங்கள் அன்பு என்றும் நிலைத்திருக்கட்டும். வாழ்க, வளர்க வளமுடன்.

* * * * *
சிவகங்கை மாவட்டத்தில் நமது தமிழக அரசால் தரப்பட்ட Educational CDs/DVDs களில் Porn Movie இருந்ததால் ஆசிரியர்களும், மாணவர்களும் 'உணர்ச்சிகளின் கலவையாய்' மாறியிருந்தனர். தமிழக அரசு Sarva Shiksha Abhiyan திட்டத்தில் கல்வியை வளர்க்க Educational CDs/DVDs தந்தால், அதில் சிலர் இந்த Sha Sha Sleazin' விளையாட்டு செய்கிறார்கள். இது சம்பந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* * * * *
Union Carbide gas leak case - - -


26 வருட 'நீதி போராட்டத்திற்கு' பிறகு சொற்ப நிவாரண நிதியும்; உயிர், உடமை, உறுப்புகள், சொந்தங்கள், வாழ்வை மற்றும் எதிர்காலத்தை இழந்தவர்களுக்கு இந்த 'மக்களை அழிக்கும்' மத்திய அரசும், 'உலக நாடுகளை அழிக்கும்' உலக அடியாலும் தந்த நிவாரணம் சொற்ப காசு, அநீதி, கண்ணீர், மனதில் வலியும் - என்றும் மன்னிக்கமுடியாத வடுவும்.

உலக அடியாலும் மற்றும் சில நாடுகளும் இந்தியாவிற்கு வந்து தொழில் செய்யலாம். Corporate -காரர்களிடம் அடிமை பட்டு கிடக்கும் இந்த இந்தியாவில் மனித உயிர் இலவசம். வாருங்கள்; இரத்தத்தை உறிஞ்சுங்கள்; உயிரை உறிஞ்சுங்கள்;  உலக அடியாளுக்கு இந்த உலகில் உள்ள எண்ணெய் வளத்தில் 26% சொந்தம். அடியாளை எதிர்த்தால் மட்டும் அல்ல, ஒரு நாடு எண்ணெய் வளமுள்ளதாக இருந்தால் போர் தொடுத்து அல்லது நம் போன்ற 'உலக நடிகர்கள் - விலை போகிறவர்கள்' ஆட்சி செய்யும் நாடுகளை எளிதாக மடக்கி அந்த நாட்டின் வளங்களை மடக்கி விடுவான்.

அப்போதைய முதலமைச்சர் Arjun Singh சொல்கிறார் 'எனக்கு எந்தவித Pressure-ம்  இல்லை. Warren Anderson-ஐ விடுதலை செய்தது நான்தான்.' ஆனால் அடுத்து உள்ள statement-ஐ படியுங்கள், உங்களுக்கு இந்த Impotent அரசியல்வாதிகளை புரியும்.

AICC general Secretary Digvijay Singh sent a message in which he stated that 'the whole case was dealt by the Government of India and the Supreme Court. State government hardly had any role to play in this case. But I am sure it must have been under US pressure.'




Bhopal-ன் அப்போதைய Collector, Moti Singh, சொல்வதையும் படியுங்கள்; 'Anderson was freed under Chief Secretary's orders. We kept Anderson in a room, when we arrested him, where he had access to a telephone due to which he made calls and got things done in his favour. Albeit Anderson got things done over the telephone, no one was willin' to stand surety for Anderson. Our Government officials got a junior employee of the plant to give him surety and we were followin' the Government's orders.'

மக்களே, அரசியல்வாதிகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இதில் நமது அரசும், உலக அடியாலும் செய்த அநீதிகள் உங்களுக்கு சொல்லிவிட்டோம். எனக்கு யாராவது 'நான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவன் என்றோ, இந்த கட்சிக்குத்தான் நான் Vote போடுவேன் என்றோ' சொன்னால் அவரை பரிதாபமாக பார்ப்பேன். நமது நாட்டை ஆண்ட எந்த கட்சியும் நம் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கவில்லை. ஒரு சில கட்சிகளில் ஒரு சில நல்ல தலைவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் எந்த கட்சியும் 'மக்கள் நன்மைக்காக' இல்லை. எனவே நாளைய தலைமுறையாவது அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கட்டும்.

சுருக்கமாக - அரசியல் என்பது ஒரு தனி மனிதன் பணம் சம்பாதிபதற்க்கு. இங்கு உண்மை, நீதி, நேர்மை, மக்கள் நலன் போன்றவை இருக்காது. மனித உயிர் இவர்களுக்கு தூசு. தற்போதுள்ள 'அணு ஒப்பந்தம்' கூட எந்த பாதுகாப்பும் அற்றது; நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும். இதன்படி உலக அடியாள் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். நாம் கேள்வி கேட்க முடியாது. அப்படி ஒரு 'அறிவான' ஒப்பந்தம் உலக அடியாள் பயன் பெறுவது போல்.

நமது சட்டம், பிரதமர், அரசியல் அமைப்பு, நீதிமன்றம், நீதிமான்கள் மற்றும் சக மனிதன் உட்பட யாரும் இந்த Hiroshima of Chemical Industry விசயத்தில் நேர்மையாக இல்லை. இந்த வழக்கை விசாரித்த C.B.I. மத்திய அரசு வழிகாட்டுதலின் பேரில் சொதப்பியது. Bhopal-இல் 26 வருடமாக நல்ல குடிநீர் இல்லை. விளைச்சல் இல்லை. உணவு பொருள் உற்பத்தி இல்லை. விபத்து நடந்து போது 800,000 மக்கள் வாழ்ந்தனர் அங்கு. விபத்து நடந்து போது உயிர் இழந்தவர்கள் 2,000 பேர்; and 300,000 were injured and as many as 8,000 have died since. இந்த விபத்தின் காரணமாக அன்று முதல் பல நோய்கள் இந்த மண்ணில்.




Instead of showin' some sympathy and the will to fight for the victims, the government is worried about loosin' the investment in the country. They feel any overtures to hold Dow liable for Bhopal-related issues will scare away Dow’s promised $1 billion investment in India and also discourage other American investors. Dow even admitted paying $22,000 (Rs 88 lakhs) as bribe to agriculture ministry officials to expedite registration of the three pesticides namely Dursban, Nurelle and Pride.

Investigators say the accident occurred when water entered a sealed tank containing the highly reactive gas, causing pressure in the tank to rise too high.

Union Carbide Corp., an American chemical company, said the accident was an act of sabotage by a disgruntled employee who was never identified. It has denied the disaster was the result of lax safety standards or faulty plant design, as claimed by some activists.

The Central Bureau of Investigation said the plant had not been following proper safety procedures.


Sharad Pawar வாழ்க; பிரதமர் வாழ்க; Arjun Singh, அப்போதைய பிரதமர் late.Rajiv Gandhi மற்றும் இந்த Disaster-இல் பங்கு கொண்ட அனைத்து அரசியல்வாதிகளும், மேல் மட்ட மக்களும் நீடூழி வாழ்க. வளர்க.