You are lookin' for..?

Saturday, June 19, 2010

போங்கடாங்.....

நீங்கள் அறிந்திருக்ககூடும்: KGB (Russia), MI6 (the UK), CIA (the USA) , ISI, MOSSAD (Israel), and RAW (India). இன்னும் பல உள்ளன, அந்தந்த நாடுகளுக்கு சொந்தமான Intelligence/Secret Bureau உள்ளது. இவைகளின் வேலை என்ன என்பதற்கு சில உதாரணங்கள் இதோ:


Terrorism: November 26, 2008

~ CIA வளர்த்த பிள்ளைதான் Mr Osama bin Laden (Osama bin Mohammed bin Awad bin Laden). உலக அடியாள் வளர்த்த பிள்ளை பின்பு ஏன் அவனையே தாக்கினார் என்பது அரசியல் விஷயங்கள்.

Face of ISI: Mumbai attack

~ ISI (Inter-services Intelligence of Pakistan) இதை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. இதன் ஒரே வேலை நமது நாட்டிற்கு எதிராக தீவிரவாதம் செய்வது; தீவிரவாதத்தை தூண்டுவது; தீவிரவாதிகளை தயார் செய்வது. நமது பாராளுமன்றம் மீதான தாக்குதல் மற்றும் Mumbai தாக்குதல் போன்றவற்றை நடத்தியது ISI தான்.

மேலும் உளவு பார்ப்பது, ஆளும் அரசுக்கு சாதகமாக 'திரைமறைவு'' வேலைகள் செய்வது; உள்நாட்டு - வெளிநாட்டு கலவரங்களை தூண்டிவிடுவது, மேல் மட்ட மக்களை ஊழலில் மாட்ட வைப்பது - அல்லது தப்பிக்க வைப்பது போன்றவை இவைகளின் பொதுவான கடமைகளில் அடங்கும்.

Happy Hours for Tribes

சல்வா ஜூடும் - இது நமது நாட்டில் உள்ள கூலிப்படை. நமது மத்திய அரசு TATA, ESSAR, and Jindal போன்ற Corporate-காரர்களுடன் இணைந்து உருவாக்கிய படை. இவர்களின் வேலை பழங்குடி மக்களை அவர்களது மண்ணிலிருந்து துரத்துவது, பழங்குடி மக்களின் கிராமத்தை தீயிட்டு கொளுத்துவது, அவர்கள் மீது வன்முறையை பழகுவது. இந்த கூலிப்படைக்கு வேண்டியவை (சம்பளம் உட்பட) அந்த Corporate-காரர்களிடம் இருந்து வந்துவிடும். இந்த கூலிப்படை இதுவரை 700 கிராமங்களை தீயில் கருக வைத்துள்ளது. மூன்று லட்சம் பழங்குடி மக்களை துரத்தியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த பழங்குடி மக்களுக்கு இந்த தேதி வரை எந்த அரசும் அடிப்படை வசதிகளை/உரிமைகளை நிறைவேற்றியதில்லை. அவைகளில் சில - பள்ளிக்கூடம், மருத்துவமனை, நல்ல குடிநீர், சாலை வசதி, மின்சாரம். ஆனால் இந்த பழங்குடிகளை அழிக்க அரசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவைகளை செய்ய தயார்.

Sign of innocence

Gyaneshwari Rail Mishap மற்றும் Blast on the railway track in Perani செயல்களில் ஈடுபட்டது 'இவர்கள்'தான் என விசாரணை துவங்கும் முன்பே, ஆதாரம் இல்லாமலே அரசு முடிவுகட்டி விட்டது. இது மக்களை திசை திருப்பும் முயற்சி. உண்மையை மறைக்கும் செயல். மக்களை உண்மைக்கு எதிராகவும், இந்த 'மக்கள் விரோத' அரசை ஆதரிக்கவும் 'அறிவு சலவை' செய்யும் 'குள்ள நரி' வேலை. இப்பொழுது முதல் நான்கு பத்திகளை நீங்கள் படிக்கவும். அல்லது வேறு தீவிரவாத அமைப்பு இந்த செயல்களை நிறைவேற்றியிருக்கலாம். எனவே விசாரணை முடிந்து, ஆதாரங்களுடன் 'இன்னார்தான்' செய்தார்கள் என நிரூபிப்பது அரசுவின் கடமை.


Victims of Police/Salwa Judum in Chhattisgarh

உங்களுக்கு ஒரு ஆச்சரிய உண்மை - பழங்குடி மக்களுக்கு சேமிப்பு என்றால் என்னவென்று தெரியாது. வேட்டையாடுவார்கள். பகிர்ந்து உண்ணுவார்கள். விவசாயம் தெரியும்; செய்வார்கள்; பகிர்ந்து உண்டு வாழ்வார்கள். இவர்களிடம் உதிரி/சேமிப்பு என ஏதேனும் இருந்தால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அதனால்தான் நான் எழுதினேன்: 'பழங்குடி மக்களுக்கு ஆசை - பேராசை என்றால் என்னவென்று தெரியாது' என. இந்த அளவிற்கு பழங்குடி மக்கள் இயற்கை வளத்தை பாதுகாத்தும், நிம்மதியாகவும் வாழ்வது சில 'கழிசாடைகளுக்கு' பொறுக்கவில்லை. போங்கடாங்...........


Members of Salwa Judum


This art done by Salwa Judum. Interchangeably, done by the Government of India.

No comments:

Post a Comment