You are lookin' for..?

Tuesday, January 11, 2011

அரசியல் செய்யும் 'நரிகள்' மத்தியில் வாழ்வது...

கருணாநிதி (தமிழக முதல்வர்) இறக்கும் வரை 'முதல்வர்' பதவியை விட தயாரில்லை. ஜெயலலிதா இந்த மக்களை 'மொட்டை' போட இன்னொரு வாய்ப்பு கிடைக்காதா என 'ஆட்டை இழுத்து செல்லும் நரி போல' காத்திருக்கிறார். மற்ற 'சில்லறைகள்' தங்கள் 'பெரிய தொந்தியுடன்' காத்திருகிறார்கள்.




இந்த மக்கள் என்று திருந்துவார்கள்? எப்பொழுது அறிவுடன் அரசியலை அணுகுவார்கள்? இந்த 'இலவசம் - தந்திரம் - மக்களை காவு கொடுக்கும் TASMAC - மக்களை வன் புணர்ச்சி' செய்யும் அரசியல் என்று முடிவுக்கு வரும்? விவசாயிகள் எல்லாம் பெற்று, நிம்மதியாக வாழும் காலம் எப்போது? விவசாய நிலங்கள் அரசியல்வாதிகளிடமிருந்தும், Real Estate கொள்ளைகாரர்களிடமிருந்தும் காப்பாற்றப்படுவது எப்போது/எப்பிடி? விவசாயம் 'நல்லமுறையில்' நடக்க இந்த அரசாங்கம் திட்டங்கள் தீட்டுவது எப்போது?


போங்கடாங்..! சக மனிதன், அதிலும் அரசியல் செய்யும் 'நரிகள்' மத்தியில் வாழ்வது மிக கொடுமையாக உள்ளது.





மாற்றம் என்பது என்னில் தொடங்க வேண்டும். உங்களில் தொடங்க வேண்டும். இப்படியாக வீட்டில் ஏற்பட்டு, வீதியில் நுழைந்து, ஊருக்குள் வந்து, ஒரு மாநிலம் முழுதும் 'காட்டு தீ' போல் பரவி, இந்த 'TASMAC - இலங்கை தமிழ் சொந்தங்களுக்காக கடற்கரையில் 'காற்று வாங்கிய' காமெடி உண்ணாவிரத' அரசை வீட்டிற்கு அனுப்ப 'நேர்மையுடன்' முன் வர வேண்டும். உழைக்க வேண்டும்.

Thursday, November 18, 2010

நமது பெண்கள் சமுதாயம் - ஆண் செய்தால் 'Pervert'

சொல் உபயோகம் Transvestism; நாம் வழக்கில் வைத்துள்ள சொல் Cross-dressin'.




பெண்கள் Cross-dressin' செய்து எல்லோரும் பார்த்ததுண்டு. அது ஒரு சாதாரண நிகழ்வு. Formal, casuals மற்றும் வீட்டில் இருக்கும் போதும் cross-dressin' மிக சாதாரண நிகழ்வாக பெண்கள் விசயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது நமது சமுதாயத்தில். ஆனால், ஒரு ஆண் cross-dressin' செய்தால் இந்த சமுதாயம் ஏன் கிண்டல் செய்கிறது ? அப்படி செய்தால் அந்த ஆண்மகனை நமது பெண்கள் சமுதாயம் & ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து 'Pervert' என்று அழைக்கும்.

I don't understand why women can wear male clothes - but men can't wear female clothes.


Many women probably assume that most transvestites are either homosexual or candidates for sex change surgery.
What inspires this level of anger among so many women ? Fear, I suppose. But fear of what ? Fear of the competition for the underwear drawer ? Fear that he might be gay ? Fear that he'll stretch everything and ruin her tights ? Fear that the neighbours will find out ?
But, on the whole, there is a huge difference between transvestites and transsexuals. Transsexuals lose their balls. Transvestites are keen to keep theirs.

It, perhaps, (crossdressin') produces so much confusion, bewilderment and resentment and so many pejorative remarks.
Most crossdressers live in constant fear of bein' found out. Around a quarter of male transvestites have never dared share their secret with their wives. That means that around the world millions of women are married to transvestites - and don't know it. In every million women there will be around 25,000 who are unknowingly married to (or livin' with) transvestites.

Transvestism crosses all social and professional barriers. Your best friend, your college mate, your cousin, your boss or your husband could be a secret transvestite. The chances are high that someone you know well is a crossdresser.

I believe that transvestism is one of the least harmful of all hobbies and one that no man should feel ashamed of. It is, I believe, a perfectly acceptable way for any man to escape from the day to day stresses of bein' a man in a stressful world. It's fun and clearly gives a lot of men a great deal of pleasure and it is difficult to think of any activity which is less likely to do harm to anyone.

Men who dress in womens' clothes brin' out a normal, healthy part of their own femininity, broaden their outlook on life and enjoy a temporary respite from the responsibilities and demands of bein' male.

I'm always sad to know that of the number of women who do not accept their lover/husband's crossdressing. Please, stop treatin' them horrendously badly.


Here are some facts - - -

* Well over three quarters of all transvestites regularly wear the sort of underwear worn by women under their male clothin'. Many of the rest would do so if they weren't frightened of bein' found out by wives.

* Less than half of all transvestites go out of their homes fully dressed as women and most of these are honest enough to admit that they don't fool anyone. But for most this isn't important. They want to dress in the sort of clothes worn by women - not become women.

* Transvestism must be one of the most harmless hobbies. And yet nearly three quarters of male transvestites admit that they live in constant fear of bein' found out by prejudiced relatives, neighbours or employers. Many say they don't understand why women can wear male clothin' - but men can't wear female clothes.

* Some wives are scornful and dismissive. Others are patronisin' and refuse to try and understand. Some wives `allow' their men to dress for one hour a week - as long as they do it in secret.

* Three quarters of all transvestites' partners know that the man in their lives dress in women's clothin'. But a quarter of partners do not know.

* There is good reason for the secrecy since most wives or girlfriends who know about their partner's crossdressin' disapprove. They miss a lot of fun by bein' so selfish, narrow minded and disapprovin'.

* Happily, just over a third of wives and girlfriends actively help their men dress as women by helpin' with make up and clothes. Many women admit they get a sexual turn on from seein' their male partner in silky, feminine clothes. It is common for transvestites whose partners do approve to have sex while dressed as a woman.


* The vast majority of transvestites are heterosexual.

* The average transvestite spends 12 hours a week dressed as a woman - but would like to spend 70 hours a week (rather more than half the `waking' week) dressed in feminine clothes.

எனது தனிப்பட்ட கருத்து: ஆண் 'ஆணாக இருப்பதில்தான் அழகு' என்று நான் நம்புகிறேன். பிறகு உங்கள் அறிவு.

Sunday, October 31, 2010

English - just a language

Friends, if you would like to know the GLM - you gotta visit a couple of links that I am gonna serve you. Before you visit those links, I wanna share some interestin' facts with you.



~ GLM stands for Global Language Monitor which operates from Austin, Texas-based company that collectively documents, analyzes and tracks trends in language usage worldwide, with a particular emphasis upon the English language.

~ In April 2008, GLM moved its headquarters from San Diego to Austin.

~ GLM gets a hand from Predictive Quantities Indicator (PQI), is a kind of formula, to accomplish this task. To know more about, you have to go to the link.

~ Counter View
- the target date had been changed a number of times from late in 2006 to early in 2009.
- a count is impossible because there is no possible objective definition of "word."

So as to defend its stand, GLM does follow the footprints of Samuel Johnson and Noah Webster. And to know more about, please play the link.

~ GLM has declared the millionth English word to be Web 2.0.
~ Jai Ho, Slumdog, Cloud Computing, Sexting, Defriend are now treated as "words."

This was widely criticized by a number of prominent members of the linguistic community, includin' Geoffrey Nunberg and Jesse Sheidlower and Benjamin Zimmer.




~ Nice (Latin nescius ‘not knowing') is recorded from the 13th century in the sense of ‘foolish’, then it shifted to ‘coy, shy’ and by the 16th century had the meaning ‘fastidious, dainty, subtle’ from which by the 18th century the sense ‘agreeable, delightful’ developed. (Friends - from now on, handle this word with care).

~ Decimate originally meant to reduce something by one tenth but now simply means to reduce drastically.

~ Culture is a collective term referring to the arts and human intellectual achievement in general. However it has come to be used in the sense of ‘general set of attitudes and behavioural types.'

Here you go,

http://en.wikipedia.org/wiki/Global_Language_Monitor#cite_note-6

http://news.bbc.co.uk/2/hi/programmes/world_news_america/8094381.stm

I hope the above mentioned links will serve you the purpose.

Sunday, October 24, 2010

Despise

Do you simply despise your friend's girlfriend/boyfriend? Here are some ways to not let her/him come in the way of your friendship.

This is a classic situation that has happened to almost all of us. Your best friend, the one you have literally grown up with, who you have shared your deepest darkest secrets with, has a new man/girl in her/his life and you simply hate her/him. But like most friends you are not sure how to tell him/her and deal with the repercussions. So should you open your mouth and risk being blacklisted by your friend or should you simply grin and bear it up?

- Before telling your friend how you feel, try to think about what exactly you don't like in her/his love-interest. It could be the way s/he talks, her/his attitude or simply the way s/he treats your friend. Ensure that you have some valid points to make or you will end up looking like a jealous friend. Remember, no matter how much you hate her/his guts, you need to use a tactful approach when telling your friend what you dislike about her/him.



- If your best friend's new relationship is annoying you because you aren't getting enough alone time with her/him, fear not. Try to understand that s/he will be busy in the start of the relationship and may not have much time to spare. But at the same time, tell her/him how you feel and you both can still do girly/boys stuff together. Going shopping together, pampering yourselves at the spa or salon or even watching Sex & the City re-runs — these are some things s/he wouldn't want to do with her/him man and you can always be there.

- Figure out what issue you have with your friend's man/girl and see if you can resolve it. Maybe you just need to spend some time alone with her/him and talk it out. If you feel s/he bad mouths you to your friend, ask her/him about it. Find out what is the bone of contention. You could also tell her/him if you don't like the way s/he behaves around your friend and to improve.

- It's perfectly all right to have an opinion on your mate's love interest. But, if you feel that s/he is doing her more harm than good, it might make sense to tell another friend about it. If her/his boy/girlfriend is a drug user or has been cheating on your friend or has a history of bad behaviour than you owe it to your friend to tell her/him and let her/him decide what to do. This can be risky, as if your friend still keeps the relationship you may feel betrayed. No matter what your friend decides to do, once you tell her/him, your duty ends. You need to let go which may also mean being there for your friend if s/he decides to marry the guy/girl.

- At times, no matter how much you hate it, it's best to cut ties with your friend until s/he realises herself that her/his boy/girlfriend isn't right for her/him. This might seem a bit drastic initially but can work out in the long run. Especially if your friend is in a very depressing or abusive relationship and refuses to get out, it can affect your mental state too. Make sure s/he knows that you love her/him and will be there for her/him if s/he decides to leave him/her.

Courtesy: a couple of websites.

Saturday, October 23, 2010

கோரைப் பற்களைக் காட்டிய முகமூடிகள்

June 1st, 2010 அன்று சாரு நிவேதிதாவிடம் பகை தீர்த்துக் கொண்ட இரு 'நடிகர்களின்' முகமூடியை கிழிக்கும் நோக்கில் சாரு நிவேதிதா எழுதிய விளக்கம் உங்களுக்காக...

மன்னிப்புக் கேள்!

மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன்.

இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத் தலைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது. இத்தலைப்பின் உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப் பற்றி ஒரு டாக் ஷோ செய்ய வேண்டும் என்பதுதான். அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஆண்டனி. இதை அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான் என்னால் உணர முடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீது இருந்த பகையை இந்த நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது.

கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.

என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். அதனாலேயே நண்பர்கள் என்னை ட்யூப் லைட் என்பார்கள்.

நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்று கவனித்தால் தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான். அதை இயக்குபவர் ஆண்டனி.

அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக கெரில்லாத் தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்து விழுந்தது. “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள் என்றீர்கள். அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின் பின்னால் போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசை திருப்பியதற்காக வருத்தப்படுகிறீர்களா?” கொஞ்சம் திகைத்துப் போன நான் ”ஆமாம்” என்றேன். விடாமல் தொடர்ந்து ”அதற்காக உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி. எனக்கு அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்? அப்படியே புரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? மேலும், நான் என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக் கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்து கொண்டார் என்ற காரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின் பார்ட்னரா? எனக்கும் அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது?

ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான் ”நித்யானந்தாவை நம்பி ஏமாந்த கதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன். ஆனால் கோபிநாத் மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை முட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி. கிட்டத்தட்ட ஒரு கொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத் தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள். இது சம்பந்தமாக என் வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையைப் பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னை அடித்தார்கள். பவா ஒரு கம்யூனிஸ்ட். அவரும் நீயா நானா கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு நான் வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார்.

ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடுமா? ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள். பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம் செய்து கொண்டவன் என்று. தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்து விடுகிறாள். என்னுடைய நிலைமையும் அதுதான். நித்தி தன்னை சாமி என்றார். எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும். மேலும், மிக வெகுளியான ஒரு ஆள் நான். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன். ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத் தோன்றும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான் நம்புவேன். அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா? அதனால்தான் நித்தியை நம்பினேன்.

இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்தி அல்லவா எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?

உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன். ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான் என் பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அதில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் ரஷ்யா வீழ்ந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறது புள்ளிவிபரம். ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிசத்தால் ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின் சீனாவிலும் 60 லட்சம். கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காக யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா? போலிச் சாமியார்கள் ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள் சுயநலத்துக்காக மக்களை ஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று சக மனிதர்களைக் கொல்லவில்லையே?

தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரை நாம் நம்புகிறோம். பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம் ஒரு அனுபவமாகக் கொள்கிறோம். அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில் நித்தியின் தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. நித்தியை குமுதம் சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும், நித்தியின் பிரசங்கம் விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது. ஆக, நித்தியை பிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும் சொல்வார்களா? சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டு கிழிந்தால் இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய தொகை கிடைக்காமல் போகும். அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள் வாய் திறக்க மாட்டார்கள். எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான் தமது கோரைப் பற்களைக் காட்டுவார்கள்.

மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும் பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு தத்துவத்தையோ ஒரு நபரையோ நாம் நம்புகிறோம். பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்த தோற்றம் பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம். அதைத்தான் குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம். இதில் மன்னிப்புக் கேட்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை.

ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது. டி.வி.யில் முகம் தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இது என்று இந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.

(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்).

1.6.2010.

10.07 a.m.