You are lookin' for..?

Tuesday, January 11, 2011

அரசியல் செய்யும் 'நரிகள்' மத்தியில் வாழ்வது...

கருணாநிதி (தமிழக முதல்வர்) இறக்கும் வரை 'முதல்வர்' பதவியை விட தயாரில்லை. ஜெயலலிதா இந்த மக்களை 'மொட்டை' போட இன்னொரு வாய்ப்பு கிடைக்காதா என 'ஆட்டை இழுத்து செல்லும் நரி போல' காத்திருக்கிறார். மற்ற 'சில்லறைகள்' தங்கள் 'பெரிய தொந்தியுடன்' காத்திருகிறார்கள்.




இந்த மக்கள் என்று திருந்துவார்கள்? எப்பொழுது அறிவுடன் அரசியலை அணுகுவார்கள்? இந்த 'இலவசம் - தந்திரம் - மக்களை காவு கொடுக்கும் TASMAC - மக்களை வன் புணர்ச்சி' செய்யும் அரசியல் என்று முடிவுக்கு வரும்? விவசாயிகள் எல்லாம் பெற்று, நிம்மதியாக வாழும் காலம் எப்போது? விவசாய நிலங்கள் அரசியல்வாதிகளிடமிருந்தும், Real Estate கொள்ளைகாரர்களிடமிருந்தும் காப்பாற்றப்படுவது எப்போது/எப்பிடி? விவசாயம் 'நல்லமுறையில்' நடக்க இந்த அரசாங்கம் திட்டங்கள் தீட்டுவது எப்போது?


போங்கடாங்..! சக மனிதன், அதிலும் அரசியல் செய்யும் 'நரிகள்' மத்தியில் வாழ்வது மிக கொடுமையாக உள்ளது.





மாற்றம் என்பது என்னில் தொடங்க வேண்டும். உங்களில் தொடங்க வேண்டும். இப்படியாக வீட்டில் ஏற்பட்டு, வீதியில் நுழைந்து, ஊருக்குள் வந்து, ஒரு மாநிலம் முழுதும் 'காட்டு தீ' போல் பரவி, இந்த 'TASMAC - இலங்கை தமிழ் சொந்தங்களுக்காக கடற்கரையில் 'காற்று வாங்கிய' காமெடி உண்ணாவிரத' அரசை வீட்டிற்கு அனுப்ப 'நேர்மையுடன்' முன் வர வேண்டும். உழைக்க வேண்டும்.

No comments:

Post a Comment