You are lookin' for..?

Sunday, May 15, 2011

வீம்பாக மடத்தனம் செய்வது...

சிலர் 'வீம்பு' பிடித்து தனது 'முட்டாள்'தனத்தை தொடர்வதை நம்மில் பலர் பல முறை பார்த்திருப்போம். உளவியல் காரணம் 'தான் செய்தது/சொன்னது தப்பு என்று ஒப்புக்கொண்டால் நாம் அவர்களை முட்டாள் என்று எண்ணி விடுவோம்' என்று. ஆனால், ஒப்புகொள்வதில் இல்லை பிரச்சினை. காரணம், 'எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. எல்லோரும் தப்பும், சரியும் கலந்தவர்களே.' மாறாக, அந்த முட்டாள்தனத்தை தொடர்வேன் என 'வீம்பு' பிடிப்பது 'ஆகப் பெரிய மடத்தனம்.'




அந்த எழுத்தாளர்/Writer 'மன்மதன் அம்பு' திரைப்படம் பற்றி 'புகழ்ந்து' எழுதிய (குறிப்பாக 'நீல வானம்' பாடல் பற்றிய) விமர்சனத்திற்கு நான் 'எதிர் வினை' செய்தேன். நிறைய கோவத்துடன் நான் செய்தேன். சில முகம் அறியா தோழர்களும். அந்த 'மன்மதன் அம்பு' Post-யே தனது blog-ல் இருந்து தூக்கிவிட்டார். நான் எழுதியது  'அப்படியே' என் மனதில் இல்லை. ஆனால், ஒரு வரி ஞாபகம் உள்ளது. அது 'உங்களை போன்ற தமிழ் bloggers, writers எல்லாம் தமிழ் வாசகனை மட சாம்பிராணி, ஞான சூன்யம் என நினைத்து இந்த மாதிரி போலிகளை கொண்டாடி எழுதும் உளவியல் என்ன' என்று. இங்கு தரப்பட்டுள்ள எதிர் வினை பரிமாற்றம் 'நடிநிசி நாய்கள்' திரைப்படத்தை அந்த 'writer' புகழ்ந்து எழுதியதால் நிகழ்ந்தது.

Sunday, May 1, 2011

அந்தரங்கத்தின் இதழ்களில் மது..!

முதல் மதுவும் கடைசிப் பெண்ணும் - மனுஷ்ய புத்திரன்.



எப்போதும்
சாம்பல் கிண்ணங்கள் போல்தான்
உயயோகிக்க வேண்டுமா
நமதிந்த உடலகளை?


இன்று நாம் பயன்படுத்துவோம்
அதை
மதுக்கிண்ணங்களாக


இச்சையின்
அதிரும் மின் தந்திகளில்
உனது உடல்
எங்கெங்கும் நகர்ந்துகொண்டிருகிறது


ஒரு உடலை எப்போதும்
ஏதோ ஒரு மலிவான திரவத்தில்
ஐஸ் துண்டுகளைப் போலத்தான்
நாம் போடவேண்டுமா?


கிறிஸ்துவைப்போலவே
இன்று
நாமும் நிகழ்த்தலாம்
கொடுத்துத் தீராத மதுவின்
அற்புத தினத்தை


உனது வெற்றுடலின் மேல்
காலம் ஒரு புகையாக படிகிறது
இந்தக் காட்சியை ஒருபோதும்
நாம் முழுமையாக
திரும்ப நினைத்துவிடக் கூடாது
என்பதற்காக
அதன் மேல் மறதின் திரை ஒன்று
அக்கணமே வீழ்கிறது


அன்பே
உன் அந்தரங்கத்தின் இதழ்களில்
இந்த மதுவை
ஒரு கணமே தேக்கி வைக்க முடியும்


மறுகணம்
அதை உறிஞ்சிக் குடிப்பதற்குள்
உன் உடலின்
பல்லாயிரம் ஆண்டு பழமையில்
அது அப்படிப் புளிப்பேறிவிடுகிறது.


இவ்வாறுதான்
அன்று நான்
இந்த உலகின்
முதல் மதுவை அருந்தினேன்.


இவ்வாறுதான்
அன்று நான்
இந்த உலகின்
கடைசிப் பெண்ணை
அருந்தினேன்.





இந்த கொண்டாட்டத்தின் உச்சம் உங்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது என்னால் கணிக்க முடியவில்லை. நான் இந்த தமிழ் கவிஞனின் 'கொண்டாட்டத்தை' அருந்தினேன். வாழ்க அந்த கவி, திரு. மனுஷ்ய புத்திரன்.

நன்றி: உயிர்மை.